இன்ஸ்டாகிராம் 49 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புகைப்படங்கள் மற்றும் குறுகிய நீளம் கொண்ட காணொளிகளை பகிர்ந்து கொள்ளும் பிரபல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமிற்கு உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் 49 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களின் தகவல்கள், அனைவரும் பார்க்கும் வகையில் இணையத்தில் வெளியாகியுள்ளதாக செய்தி வெளியாகியது.
இதை மும்பையைச் சேர்ந்த பிரபல சமூக வலைதள மார்க்கெட்டிங் நிறுவனம் சாட்டர்பாக்ஸ், இன்ஸ்டாகிராம் பயனர்களின் தகவல்கள் கசிய விட்டதாக தெரியவந்துள்ளது. பயனர்களின் கணக்கு விவர குறிப்பு (பயோ), புகைப்படம், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, அவர்கள் வசிக்கும் நகரம் மற்றும் நாடு, தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவையும் கசியவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த குறித்து பேஸ்புக் நிறுவனம் கூறுகையில், "இன்ஸ்டாகிராம் பயனர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் இன்ஸ்டாகிராமிலிருந்து எடுக்கப்பட்டதா அல்லது மற்ற மூலங்களிலிருந்து எடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இது குறித்து அறிவதற்காக சாட்டர்பாக்ஸ் நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.